திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும்;
செவிஅவன் அறிவுநூல் கேட்கும்;
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் ; கண்கள்
விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும் ;
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே, மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனே என்னும்என் மனனே.

பொருள்

குரலிசை
காணொளி