என்செய்கோம் தோழி, தோழிநீ துணையா
இரவுபோம்; பகல்வரு மாகில்,
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும்
அலமரு மாறுகண் டயர்வன்;
கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவிற்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மஞ்சணி மணியம் பலவவோ என்று
மயங்குவன் மாலையம் பொழுதே.