பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும் கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே.
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும் பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக் காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே.
விண் இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த, பண் இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் கண் இடை மணியின் ஒப்பார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எண் இடை எழுத்தும் ஆனார்-இலங்கு மேற்றளியனாரே.
சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும் வாமன்; நல் வானவர்கள் வலம் கொடு வந்து போற்றக் காமனைக் காய்ந்த கண்ணார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏமம் நின்று ஆடும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.
ஊனவர்; உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி, தானவர் தனமும் ஆகி, தனஞ்சயனோடு எதிர்ந்த கானவர்; காளகண்டர்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏனம் அக்கோடு பூண்டார்-இலங்கு மேற்றளியனாரே.
மாயன் ஆம் மாலன் ஆகி, மலரவன் ஆகி, மண் ஆய், தேயம் ஆய், திசை எட்டு ஆகி, தீர்த்தம் ஆய், திரிதர்கின்ற காயம் ஆய், காயத்து உள்ளார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏய மென் தோளிபாகர் -இலங்கு மேற்றளியனாரே.
மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டாா பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் கண்ணினை மூன்றும் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எண்ணினை எண்ண வைத்தார் -இலங்கு மேற்றளியனாரே.
செல்வியைப் பாகம் கொண்டார்; சேந்தனை மகனாக் கொண்டாா மல்லிகைக் கண்ணியோடு மா மலர்க்கொன்றை சூடி கல்வியைக் கரை இலாத காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எல்லியை விளங்க நின்றார்-இலங்கு மேற்றளியனாரே.
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளைக் கூறு இயல் பாகம் வைத்தார்; கோள் அரா மதியும் வைத்தார் ஆறினைச் சடையுள் வைத்தார்; அணி பொழில் சச்சி தன்னுள் ஏறினை ஏறும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால் கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள் இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே.