நன்று ஆங்கு இசை மொழிந்து, நன்நுதலாள் பாகம் ஆய்,
ஞாலம் ஏத்த,
மின் தாங்கு செஞ்சடை எம் விகிதர்க்கு இடம்போலும்
விரை சூழ் வெற்பில்,
குன்று ஓங்கி வன் திரைகள் மோத, மயில் ஆலும் சாரல்,
செவ்வி
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு
நணாவே.