திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

புற்றினில் வாழும் அரவுக்கும், திங்கட்கும், கங்கை என்னும்
சிற்றிடையாட்கும், செறிதரு கண்ணிக்கும், சேர்வு இடம் ஆம்-
பெற்றுடையான், பெரும் பேச்சு உடையான், பிரியாது எனை ஆள்
விற்று உடையான் ஒற்றியூர் உடையான் தன் விரிசடையே.

பொருள்

குரலிசை
காணொளி