பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சுற்றி வண்டு யாழ் செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர்; பிறர் இடை நீ ஒற்றி கொண்டாய்; ஒற்றியூரையும் கைவிட்டு, உறும் என்று எண்ணி விற்றி கண்டாய்; மற்று இது ஒப்பது இல், இடம்-வேதியனே!