திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

சுற்றிக் கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான்;
ஒற்றித் திரி தந்து நீ என்ன செய்தி? உலகம் எல்லாம்
பற்றித் திரி தந்து பல்லொடு நா மென்று கண் குழித்துத்
தெற்றித்து இருப்பது அல்லால், என்ன செய்யும், இத் தீவினையே?

பொருள்

குரலிசை
காணொளி