பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இறப் பாதம் தன்னால் ஒருக்கின ஆறு அடியேனைப் பிறப்பு அறுத்து ஆள வல்லான், நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்த நஞ்சைப் பரு(க்)கின ஆறு என் செய்கேன்?-ஒற்றியூர் உறை பண்டங்கனே!