பொறையவன் காண்; பூமி ஏழ் தாங்கி ஓங்கும்
புண்ணியன் காண்; நண்ணிய புண்டரீகப் போதில்
மறையவன் காண்; மறையவனைப் பயந்தோன் தான்
காண்; வார்சடை மாசுணம் அணிந்து, வளரும் பிள்ளைப்-
பிறையவன் காண்; பிறை திகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்
பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும்
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.