திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

ஆய்ந்தவன் காண், அருமறையோடு அங்கம் ஆறும்;
அணிந்தவன் காண், ஆடு அரவோடு என்பும் ஆமை;
காய்ந்தவன் காண், கண் அழலால் காமன் ஆகம்;
கனன்று எழுந்த காலன் உடல் பொடி ஆய் வீழப்
பாய்ந்தவன் காண்; பண்டு பலசருகால் பந்தர்
பயின்ற நூல் சிலந்திக்குப் பார் ஆள் செல்வம்
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

பொருள்

குரலிசை
காணொளி