எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று
ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால், சென்று கைகூடுவது
அன்றால்
கந்த மா மலர் உந்தி, கடும் புனல் நிவா மல்கு கரைமேல்,
அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே