துன்ன ஆடை ஒன்று உடுத்து, தூய வெண் நீற்றினர்
ஆகி,
உன்னி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது
அன்றால்
பொன்னும் மா மணி உந்தி, பொரு புனல் நிவா மல்கு
கரைமேல்,
அன்னம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே