வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று
உள்கி
உருகி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது
அன்றால்
முருகு உரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்து இழி
நிவா வந்து
அருகு உரிஞ்சு நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே