செழுந் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன்
அலற,
அழுந்த ஊன்றிய விரலான்; "போற்றி!" என்பார்க்கு
அல்லது அருளான்
கொழுங் கனி சுமந்து உந்தி, குளிர்புனல் நிவா மல்கு
கரைமேல்,
அழுந்தும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்
தம்(ம்) அருளே