திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: பியந்தைக்காந்தாரம்

நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க
(அ)ரியானை
வணங்கி நைபவர்க்கு அல்லால், வந்து கைகூடுவது
அன்றால்
மணம் கமழ்ந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரை
மேல்,
அணங்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்
தம்(ம்) அருளே

பொருள்

குரலிசை
காணொளி