திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும்;
காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும்;
பாட்டின் ஆர் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேயார்
ஆட்டினார், அரவம் தன்னை;-ஆலங்காட்டு அடிகளாரே.

பொருள்

குரலிசை
காணொளி