பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மக்களே, மணந்த தாரம், வல் வயிற்று அவரை, ஓம்பும் சிக்குளே அழுந்தி, ஈசன் திறம் படேன்; தவம் அது ஓரேன்; கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறையக் கண்டும், இக் களேபரத்தை ஓம்ப, என் செய்வான் தோன்றினேனே!