திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
நீண் உலகுஎலாம் ஆளக் கொடுத்த என்
ஆணியை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற
தாணுவை, தமியேன் மறந்து உய்வனோ?

பொருள்

குரலிசை
காணொளி