திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை,
வார் உலாம் முலை மங்கை மணாளனை,
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை,
ஆர்கிலா அமுதை, மறந்து உய்வனோ?

பொருள்

குரலிசை
காணொளி