திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

முந்தி மூ எயில் எய்த முதல்வனார்,
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார்,
அந்திக்கோன்தனக்கே அருள்செய்தவர்-
பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே.

பொருள்

குரலிசை
காணொளி