திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

சாக்கியத்தொடு மற்றும் சமண்படும்
பாக்கியம்(ம்) இலார் பாடு செலாது, உறப்
பூக் கொள் சேவடியான் கச்சி ஏகம்பம்
நாக்கொடு ஏத்தி, நயந்து, தொழுதுமே.

பொருள்

குரலிசை
காணொளி