திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

கார் இருள் உருவ மால்வரை புரையக் களிற்றினது உரிவை
கொண்டு அரிவை மேல் ஓடி,
நீர் உருமகளை நிமிர்சடைத் தாங்கி, நீறு அணிந்து ஏறு உகந்து
ஏறிய நிமலர்;
பேர் அருளாளர்; பிறவியில் சேரார்; பிணி இலர்; கேடு இலர்;
பேய்க்கணம் சூழ
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

பொருள்

குரலிசை
காணொளி