கச்சும் ஒள்வாளும் கட்டிய உடையர், கதிர் முடி சுடர்விடக்
கவரியும் குடையும்
பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறை நுதலவர், தமைப்
பெரியவர் பேண,
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பருவரை எடுத்த
திண்தோள்களை அடர்வித்து,
அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.