திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

நோற்றலாரேனும், வேட்டலாரேனும், நுகர் புகர் சாந்தமோடு
ஏந்திய மாலைக்
கூற்றலாரேனும், இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர்
இயல்பினை உடையார்;
தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும், அடியொடு
முடி உற, தங்கள்
ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

பொருள்

குரலிசை
காணொளி