திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை

முளைக்கைப் பிடி முகமன் சொலி, முது வேய்களை இறுத்து,
துளைக்கைக் களிற்று இனம் ஆய் நின்று சுனை நீர்களைத் தூவி,
வளைக்கைப் பொழி மழை கூர்தர, மயில் மான்பிணை நிலத்தைக்
கிளைக்க(ம்) மணி சிந்தும் திருக்கேதாரம் எனீரே!

பொருள்

குரலிசை
காணொளி