கரியரே இடந்தான் : செய்யரே யொருபால் ;
கழுத்தில்ஓர் தனிவடம் சேர்த்தி
முரிவரே; முனிவர் தம்மொடால் நிழற்கீழ்
முறைதெரிந் தோருடம் பினராம்
இருவரே; முக்கண் நாற்பெருந் தடந்தோள்
இறைவரே; மறைகளுந் தேட
அரியரே; ஆகில், அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.