பழையராந் தொண்டர்க் கெளியரே; மிண்டர்க்
கரியரே; பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுத் தருளாப்
பிச்சரே; நச்சரா மிளிருங்
குழையராய் வந்தென் குடிமுழு தாளுங்
குழகரே; ஒழுகுநீர்க் கங்கை
அழகரே; ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.