திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகுந்
திறத்தவர் புறத்திருந் தலச,
மைக்கடா அனைய என்னையாள் விரும்பி
மற்றோரு பிறவியிற் பிறந்து
பொய்க்கடா வண்ணங் காத்தெனக் கருளே
புரியவும் வல்லரே; எல்லே
அக்கடா வாகில்; அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

பொருள்

குரலிசை
காணொளி