முழுவதும்நீ யாயினும்இம் மொய்குழலாள் மெய்ம்
[முழுதும்
பழுதெனவே நினைந்தோராள் ; பயில்வதும்நின்
[னொருநாமம்;
அழுவதும்நின் திறம்நினைந்தே; அதுவன்றோபெறும்பேறு !
செழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய
[சுந்தரனே.