திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

உண்ணெகிழ்ந் துடலம் நெக்குமுக் கண்ணா
ஓலம்என் றோலமிட் டொருநாள்
மண்ணின்நின் றலரேன் ; வழிமொழி மாலை
மழலையஞ் சிலம்படி முடிமேற்
பண்ணிநின் றுருகேன் ; பணிசெயேன் எனினும்,
பாவியேன் ஆவியுள் புகுந்தென்
கண்ணின்நின் றகலான் என்கொலோ ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

பொருள்

குரலிசை
காணொளி