அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே ?
அன்பொடு தன்னை அஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத் துள்ளம்அள் ளூறும்
தொண்டருக் கெண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும், பைம்பொன்மா ளிகையும்,
பவளவா யவர்பணை முலையும்,
கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே .