திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரபஞ்சமம்

வேயின் ஆர் பணைத்தோளியொடு ஆடலை வேண்டினாய்!
விகிர்தா! உயிர்கட்கு அமுது
ஆயினாய்! இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே!
தீயின் ஆர் கணையால் புரம்மூன்று எய்த செம்மையாய்!
திகழ்கின்ற சிற்றம்பலம்
மேயினாய்! கழலே தொழுது எய்துதும், மேல் உலகே.

பொருள்

குரலிசை
காணொளி