தாரின் ஆர் விரி கொன்றையாய்! மதி தாங்கு நீள்சடையாய்!
தலைவா! நல்ல
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை தன்னுள்
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம்
ஏரினால் அமர்ந்தாய்! உன சீர் அடி ஏத்துதுமே.