பார் அகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி
கண்டு
ஆர் அருள் புரிந்து, அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன்
மலையை வினவில்
வார் அதர் இருங் குறவர் சேவலில் மடுத்து, அவர் எரித்த
விறகில்
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற
காளத்திமலையே.