பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி, ஆர்வத்தை உனக்கே தந்து பங்கத்தைப் போக மாற்றி, பாவித்தேன், பரமா, நின்னை! சங்கு ஒத்த மேனிச் செல்வா! சாதல் நாள், நாயேன் உன்னை, “எங்கு உற்றாய்?” என்ற போதா, “இங்கு உற்றேன்” என் கண்டாயே!