பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வெள்ள நீர்ச் சடையனார் தாம் வினவுவார் போல வந்து, என் உள்ளமே புகுந்து நின்றார்க்கு, உறங்கும் நான் புடைகள் பேர்ந்து “கள்ளரோ, புகுந்தீர்?” என்ன, கலந்து தான் நோக்கி, நக்கு, “வெள்ளரோம்!” என்று, நின்றார்-விளங்கு இளம்பிறையனாரே.