பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன், மதி இலாதேன்; இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் அருள் அவாப் பெறுதல் இன்றி, அஞ்சி, நான் அலமந்தேற்குப் பொருள் அவாத் தந்த ஆறே போது போய்ப் புலர்ந்தது அன்றே!