திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: தனித் திரு நேரிசை

ஆசை வன் பாசம் எய்தி, அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய்,
ஊசலாட்டுண்டு, வாளா, உழந்து நான் உழிதராமே,-
தேசனே! தேசமூர்த்தி! திரு மறைக்காடு மேய
ஈசனே!-உன் தன் பாதம் ஏத்தும் ஆறு அருள், எம்மானே!

பொருள்

குரலிசை
காணொளி