திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

ஏழித் தொல் மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை ஓட, அகற்றுவார்-
பாழித் தண்புனல் பாய் கெடிலக் கரை,
வேழத்தின்(ன்)உரி போர்த்த, வீரட்டரே.

பொருள்

குரலிசை
காணொளி