நாறு பூங்கொன்றை முடியார் தாமே; நால்மறையோடு
ஆறு அங்கம் சொன்னார் தாமே;
மாறு இலா மேனி உடையார் தாமே; மா மதியம்
செஞ்சடைமேல் வைத்தார் தாமே;
பாறினார் வெண்தலையில் உண்டார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.