விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே;
மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே;
கண் விழியாக் காமனையும் காய்ந்தார் தாமே;
காலங்கள், ஊழி, கடந்தார் தாமே;
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே; பழனை
பதியா உடையார் தாமே;
திண் மழுவாள் ஏந்து கரத்தார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.