அல்லும் பகலும் ஆய் நின்றார் தாமே; அந்தியும்
சந்தியும் ஆனார் தாமே;
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே;
தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே;
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.