திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

வேதம் ஓர் நான்கு ஆய், ஆறு அங்கம் ஆகி,
விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி,
கூதல் ஆய், பொழிகின்ற மாரி ஆகி, குவலயங்கள்
முழுதும் ஆய், கொண்டல் ஆகி,
காதலால் வானவர்கள், “போற்றி!” என்று
கடிமலர்கள் அவை தூவி ஏத்த நின்ற
பாதி ஓர் மாதினனை; பாசூர் மேய பரஞ்சுடரை;
கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.

பொருள்

குரலிசை
காணொளி