ஞாலத்தை உண்ட திருமாலும், மற்றை நான்முகனும்,
அறியாத நெறியார்; கையில்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்து, தொல்
உலகில் பல் உயிரைக் கொல்லும் கூற்றைக்
கால(த்)த்தால் உதைசெய்து, காதல் செய்த
அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்;
பால் ஒத்த வெண்நீற்றர்; பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.