புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால்
பொதுப் பந்தர் அது இழைத்துச் சருகால் மேய்ந்த
சித்தியினால், அரசு ஆண்டு சிறப்புச் செய்யச்
சிவகணத்துப் புகப் பெய்தார்; திறலால் மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு
விரவியவா கண்டு, அதற்கு வீடு காட்டி,
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.