இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார்;
இடை மருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார்;
அணைவு அரியர், யாவர்க்கும்; ஆதிதேவர்;
அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர்;
தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனித்
தத்துவனை, சாந்து அகிலின் அளறு தோய்ந்த
பணை முலையாள் பாகனை, எம் பாசூர் மேய
பரஞ்சுடரை, கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.