நீர் ஆரும் செஞ்சடை மேல் அரவம் கொன்றை
நிறை மதியம் உடன் சூடி, நீதியாலே
சீர் ஆரும் மறை ஓதி, உலகம் உய்யச் செழுங்
கடலைக் கடைந்த கடல் நஞ்சம் உண்ட
கார் ஆரும் கண்டனை; கச்சி மேய
கண்ணுதலை; கடல் ஒற்றி கருதினானை;
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்
பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.