பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி, நஞ்சேன், நான் அடியேன், நலம் ஒன்று அறியாமையினால், துஞ்சேன்; நான் ஒரு கால்-தொழுதேன்; திருக்காளத்தியாய்! அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .