பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
செய் வினை ஒன்று அறியாதேன்; “திருவடியே சரண்” என்று பொய் அடியேன் பிழைத்திடினும், பொறுத்திட நீ வேண்டாவோ? “பை அரவா! இங்கு இருந்தாயோ?” என்ன, பரிந்து என்னை உய்ய அருள் செய்ய வல்லான், “உளோம், போகீர்!” என்றானே!