திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: வியாழக்குறிஞ்சி

நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில்
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை-உள்கு, மட நெஞ்சே!
வாய் புல்கு தோத்திரத்தால், வலம்செய்து, தலைவணங்கி,
பாய் புலித்தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே.

பொருள்

குரலிசை
காணொளி